செப்டம்பர் மாத ராசி பலன்கள் – மகரம்!!

591

makaram‘‘மகர கௌரவம்’’ என்பதற்கேற்ப சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நீங்கள் ராசிநாதன் சனி, ராகுவுடன் பத்தில் இருக்கிறார். பொருளாதாரம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும்.

மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தான பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு, மனை வாங்க தடைகள் ஏற்படலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளு இருந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் சீராக நடக்கும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.

கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். பெண்களுக்கு இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.

உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெரிய வெற்றியைப் பெறலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை. நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.

பரிகாரம் : சனிக்கிழமைதோறும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : ‘‘ஓம் வயநமசி’’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து பிரதோஷ அபிஷேகத்திற்குக் கொடுக்கவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 4, 5 ஆகிய திகதிகளில் சிக்கனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : செவ்வாய், புதன், வெள்ளி.
தேய்பிறை : புதன், வெள்ளி.